வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தனித்தனியாக தேர்தலில் நின்று..

ஒவ்வொரு கட்சியும், தனித்தனியாக தேர்தலில் நின்று பார்க்கட்டும். அப்போது, ஒவ்வொரு கட்சியின் உண்மை பலம்; செல்வாக்கு என்னவென்பது தெரியும்' என, விஜயகாந்த் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.அ.தி.மு.க.,வுக்கு 35 சதவீதம், தி.மு.க.,வுக்கு 28, தே.மு.தி.க.,வுக்கு 10, கம்யூனிஸ்டுகளுக்கு 10, பா.ம.க.,வுக்கு 8 சதவீதம் என, கணக்கு போட்டு சொல்கின்றனர். பிறகு தேர்தல் எதற்கு? கூட்டணி அமைத்தால், 39 சதவீதம் ஓட்டு வாங்கிய கூட்டணி, அத்தனை இடங்களிலும் ஜெயிக்கிறது. தனித்தனியாக நிற்கும் மற்ற கட்சிகள், 61 சதவீதம் ஓட்டு வாங்கியும், ஒரு இடத்தில் கூட ஜெயிப்பதில்லை. இது சரி தானா? நியாயமா?மொத்த சட்டசபை இடங்களில், விகிதாச்சாரத்திற்கு ஏற்ப எம்.எல்.ஏ., இடங்களை கொடுப்பது தான் நியாயம். தேர்தலுக்கு முன் நடக்கும் குதிரை பேரங்கள், தேர்தலுக்குப் பின் நடக்கும்; அது தான் வித்தியாசம். எப்படி பார்த்தாலும், இப்போதுள்ள தேர்தல் முறை சரியல்ல என்று தான் தோன்றுகிறது.. தமிழகத்தில் வரப் போகும் தேர்தலைச் சந்திக்கப் போவது, இரண்டு அணிகள் தான். ஒன்று, ஸ்பெக்ட்ரம் அணி; இன்னொன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்கும் அணி. இதுதான் இறுதியான போர் வியூகம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக