வியாழன், 24 மே, 2012

ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன ......

…….. ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன என்பதும் தனிமனித உரிமைகளை மதிக்காமல் பொறுப்பின்மையுடன் நடந்து கொள்கின்றன என்றும் கூறப்படுவது தவறு, வரம்புகள் விதிப்பதும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும் பல உண்மைகள் வெளிவருவதைத் தடுப்பதற்கும், பல தவறுகள் தட்டிக் கேட்கப்படாமல் போவதற்கும் வழிகோலும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, ஊழல்களை அம்பலப்படுத்துவது, முறைகேடுகளை வெளிக்கொணர்வது, மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற நல்ல பல நடவடிக்கைகளில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஈடுபடுவதால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு, காமன்வெல்த் போட்டி ஊழல் என்று பல பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி நீதியின் கரங்களை வலுப்படுத்த முடிந்திருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டமும் மிகப்பெரிய அளவில் இதற்குக் கைகொடுத்திருக்கிறது…….....மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு வேண்டுமே தவிரகொள்ளை அடிப்பதற்காக இல்லை.லஞ்ச - ஊழல் என்பது ஒரு கொடிய வைரஸ் போல் சமூகத்தில் புரையோடிப் போய்விட்டதுஅதைக் குணப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவைஆனால்துரதிஷ்டவசமாக சட்டம் கொண்டு வர வேண்டிய மத்திய அரசேலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறி வருகிறது.இதனால்மக்களை ஏமாற்றும் பலவீனமான லோக்பால்  சட்டத்தைக் கொண்டு வரவேமத்திய அரசு முனைப்பாக உள்ளது.   அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளையும் மக்களை மயக்கும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது; ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடித்துவிட்டு, பணபலத்தால் மீண்டும் பதவியைப் பிடிக்கப் பார்ப்பது, இல்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆளும்கட்சியின் மீதான எதிர்ப்பலையில் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான் அது..  "இன்றைய ஹீரோ, நாளைய ஜீரோ, இன்றைய ஜீரோ நாளைய ஹீரோ' என்பதுதான் தேர்தல்  இலக்கணம் என்றாகிவிட்டது.. … 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக