தங்களுக்குவிருப்பமானவர்களுக்கு என்றால் கண்ணைமூடிக்கொள்வதும் வேறு நபர் என்றால் தலையில் குட்டிதலையங்கம் எழுதுவதையும் தாங்கள் நிறுத்தி விட்டுநேர்மையை கடை பிடிக்க வேண்டும்.....வாகனத்தை ஒட்டும் போது மொபைலை,உபயோகப்படுத்துவதன் மூலம், அதுவே எமனாகி விடுகிறது. ஒவ்வொரு முறை விபத்துகள் நேரிடும் போதும், உயிரிழப்புகளுக்கும், காயங்களுக்கும்,ரெடிமேடான' ஆறுதல் அறிக்கையுடன், நிவாரணத் தொகை வழங்கிவிடுவதால்,அரசின் கடமை முடிந்து விடாது. சாலை விதிகளை மீறுபவரை, கடுமையாகத்தண்டிக்க தயக்கம் காட்ட கூடாது. மொபைலில் பேசிக்கொண்டே, வாகனம் ஓட்டுபவரின் உரிமத்தை கூட ரத்து செய்து விடலாம். முக்கியமாக மதுவிலக்கை மனஉறுதியோடு அமல்படுத்த வேண்டும். இவை நடந்தால், பல உயிர்கள் பிழைக்கும்.டிராபிக் போலீசாரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, உண்மையானஅக்கறையோடு அமல்படுத்தினாலே போதும்; 75 சதவீத சாலை விபத்துகள் குறைந்துவிடும். துளிகூட பயமின்றி, சாலை விதிகளை மீறுவதற்கான தைரியம் எப்படிவருகிறது? பிடிபட்டால், குடுக்க வேண்டியதை கொடுத்தால் தண்டனை இல்லாமல் தப்பிக்கலாம் என்ற நிலைமை உள்ளதால்தான்…… சீன-இந்திய வர்த்தகஉறவுகள் மேம்பட்டுக்கொண்டே இருக்கக் காரணம், சீனா நம்முடன் பொருளாதார ரீதியில் மோதுகிறதே தவிர, மறைமுகமாகஇந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வளர்த்து விடுவதில்லை …….நம் நாட்டில், 69 சதவீதம் பேரின் சராசரி தினசரிவருமானம், 100 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளதாக, சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உண்மையா, பொய்யாஎன்பது ஒரு புறம் இருக்கட்டும்... நம் திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா போன்றோர், "ஒரு நாளைக்கு, 30 ரூபாய்க்கு மேல் வருமானம்ஈட்டுவோர் வறுமையானவர்கள் அல்ல' என்று கண்டுபிடித்து, புல்லரிக்க வைத்திருக்கின்றனர்.மற்றொரு புள்ளி விவரத்தில், நம் இந்தியரின் சராசரி ஆண்டுவருமானம், 60 ஆயிரம் ரூபாய் என்கிறது. அதே சமயம், தனி நபர் வருமானம் அமெரிக்காவில், 23 லட்சம்; ஜெர்மனியில், 25 லட்சம்; சுவிட்சர்லாந்தில், 33லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில், எப்படி நாம் உயர்ந்து, மற்ற நாடுகளோடு போட்டி போடப் போகிறோம்? நாடு சுதந்திரம்பெற்ற, 65 ஆண்டுகளில், 50 ஆண்டுகளுக்கு மேல், காங்., தலைமையிலான அரசு அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுதான் ஆண்டு கொண்டிருந்தது……. "காங்கிரஸ்மூத்த தலைவர்களின் வாய் நீளமே, தோல்விக்குக் காரணம்' என்று, ராகுல் நடத்திய ஆலோசனையில், தோற்றவர்கள் குமுறியுள்ளனர்; இது, நூற்றுக்கு நூறுஉண்மை. காங்., பேச்சாளர்களில், திக்விஜய் சிங் ஒருவர் வாயே போதும். மேலும், தேர்தல் கமிஷனையே மதிக்காத மத்திய அமைச்சர்களின் வாய் நீளமும்,பெருத்த தோல்விக்கு அடிப்படை. ராகுலைப் பற்றி, தோற்றவர்கள் குமுறாவிடினும், ராகுல் இதை உணர்ந்திருப்பார். ராஜிவின் மொத்தக் குடும்பமும் உ.பி.,யில்பவனி வந்ததை, மக்கள் வெறுப்போடுதான் பார்த்திருப்பர். மத்தியில் நடக்கும் எண்ணிக்கையற்ற ஊழல் நாடகங்களை, ஊடகங்கள் மூலம் அறிந்த உ.பி., மக்கள்,ஊழல் மையத்தில் ராகுலும் ஆணிவேர் தானே என்று புறக்கணித்து விட்டனர்………………………..நாட்டின் நதிகளை இணைக்க, நிபுணர் குழு அமைக்கும்படி, மத்திய அரசுக்குசுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்தியாவின் ஒரு பகுதியில் வெள்ளச் சேதம், இன்னொரு பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. வெள்ளப் பெருக்கை வறட்சிப்பகுதிக்கு திருப்பிவிட மட்டுமே, நீர்வளப் பயன்பாடு வல்லுனர்கள், நதிகள் இணைப்பு திட்டத்தை வரைந்தனர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலத்தில்,கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு, பிரதமர் வாஜ்பாய் காலத்தில், இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலிடம், சிலமேதாவிகள், தவறான தகவல்களைக் கூறி, குழப்பி விட்டனர். எனவே, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டம் குறித்து, தைரியமாக சொந்தக் கருத்துவெளியிடவில்லை. திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, வறுமைக் கோட்டுக்கு விளக்கம் தந்து, சர்ச்சையில் சிக்கியவர். தினமும், 25ரூபாய் கூட வருமானம் இல்லாதவர் தான், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் என்பதை கண்டுபிடித்த இந்த, "பொருளாதார விஞ்ஞானி' நதிகள் இணைப்புதிட்டத்துக்கும், புதிய முட்டுக்கட்டையை போடுகிறார். "நிறைய தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், பொருளாதார பிரச்னைகளை அலசி ஆராய்ந்த பிறகுதான், நதிகள்இணைப்பை துவக்க முடியும். இமாலய நதிகளை இணைப்பதில், சர்வதேச பிரச்னைகள் உள்ளன. நதிகளின் இயற்கையான தடத்தை மாற்றுவது விவேகமல்ல' என,அலுவாலியா கூறுகிறார். மிகுந்து வரும் வெள்ளத்தை மட்டும்தான், வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பிவிட திட்டமிடுகின்றனர். ஏற்கனவே ஓடும் நதிகளின் தடமோ,கொள்ளளவோ இதனால் மாறப் போவதில்லை. விவசாயம், நீர்வழி போக்குவரத்து மேம்பட, சீனாவில், "சர்குலர் வாட்டர் வேஸ்' ஏற்கனவே உள்ளது. அங்கு, ஒருசொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காது. ஆனால், இங்கேயோ நிலைமை பரிதாபம்!.............................. திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை.இதனாலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்தது. தைமுதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் திருவள்ளுவர் ஆண்டினை அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்……இயற்கையை நாம் அழித்து வருவதே, பேரழிவுஏற்படுவதற்கு முக்கிய காரணம்.நிலநடுக்கம் போன்றவை இயற்கையானது தான்; இவற்றைக்கட்டுப்படுத்த இயலாது என்றாலும், ஓரளவிற்காவது மட்டுப்படுத்த முடியும்.நம் நாட்டில், 13சதவீதத்திற்கும் குறைவாகவே காடுகள் உள்ளன. ஆங்காங்கே இருக்கும் மரங்களும்,கட்டடங்கள் கட்ட, சாலை போட என, பல்வேறு காரணங்களைக் கூறிஅழிக்கப்படுகின்றன.இதனால், மழை பொய்த்துப் போவது மட்டுமின்றி, நீரையும் சேமிக்கஇயலவில்லை.இது தவிர ஏரி, குளம், குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்படும்கட்டடங்களால், நீர்வளம் குறைகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சுவது, மணல் கொள்ளை என,கனிம வளங்கள் சுரண்டப்படுவதால், பூமியில் வெற்றிடம் தோன்றுகிறது. இப்படி,எல்லாவிதத்திலும் நிலத்தை பாழ்படுத்தியதால்தான், இந்த, "நடுக்கம்!'மேலும், மெல்லியபிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு, வாகனங்கள் கக்கும் புகையால் வளி மண்டல பாதிப்பு என,இயற்கையை பல வழிகளில், "ரவுண்டு' கட்டி அழிப்பதால், மழை காலத்தில் சுட்டெரிக்கும்வெயிலையும், வெயில் காலத்தில் நடுங்க வைக்கும் பனியிலும் உறைந்துகொண்டிருக்கிறோம்.நம் முன்னோர் இயற்கையை பாதுகாத்து, அவற்றோடு இயைந்தவாழ்க்கை நடத்தியதால், ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் அவற்றை அழித்து, சொகுசுவாழ்க்கை வாழ்வதால், ஆரோக்கியத்தையும் இழந்து, இயற்கை பேரழிவில் சிக்கி, கூட்டம்கூட்டமாக மடிகிறோம்.இனியாவது, இயற்கையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்குத் தான் அரசாங்கம் உள்ளதே என்று எண்ணாமல், தனிநபர்களுக்குபொறுப்பு வர வேண்டும். அரசாங்கமும், "வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்; கனிமவளங்களை காப்போம்' என்று விளம்பத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றைநடைமுறைப்படுத்தி, மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அப்போது தான், நாளையதலைமுறை தப்பிக்கும்…………நாட்டின், 121 கோடி மக்கள் தொகையில், 60 சதவீத மக்கள், இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடிசூழ்நிலைகளான, பருவநிலை மாற்றம், வான்மழை பொய்த்தல், வறண்டு வரும் நீர் ஆதாரங்கள், முறையற்ற மின்சார வினியோகம், விவசாயக் கூலியாட்கள் தட்டுப்பாடு,உச்சத்தில் உயர்ந்துள்ள உர விலை, விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது, உணவுப் பொருட்களைச் சேமிக்க சரியான கிடங்கு வசதி இல்லாமைபோன்றவற்றுடன் போராடி, விவசாயம் செய்து, உணவு தானியங்களை உற்பத்தி செய்து, அரசு களஞ்சியங்களை நிரப்புகின்றனர். அதனால் தான், உணவுத் தட்டுப்பாடு இன்றி,நமது நாடு உலக அரங்கில் வீறு நடை போடுகிறது. கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளின் அபரிமிதமான புழக்கத்தினால், இந்தியாவில் விலைவாசி பல மடங்குஉயர்ந்து வருகிறது. வெளிநாடுகளிலும், சுவிஸ் வங்கியிலும் பதுக்கப்பட்டுள்ள பணம், 300 லட்சம் கோடிகளாக இருக்கும் என்று, பத்திரிகையில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, பகீரென்றுதான் உள்ளது. வங்கிகளிடம் கடன் பெற்று, அதை முறையாகத் திருப்பி செலுத்தாத வகையில் இருக்கும் வராக்கடன்கள், 200 லட்சம் கோடிகளாகஇருப்பதாக, பத்திரிகைச் செய்திகள் தெரிவிப்பது, வருத்தத்தையும், மறுபுறம் அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், அரசாங்கத்தால்செய்யப்பட்ட விவசாயக்கடன் தள்ளுபடி, 60 ஆயிரம் கோடி ரூபாய், மீண்டும் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டு, உல்லாசமாக "உலா' வருகிறது. இதில், உண்மையாகபாடுபட்டு விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகள், 1 சதவீதமாவது பயன் பெற்றிருப்பரா? சந்தேகமே! இதனால், பலன் பெற்றவர்கள் யாராக இருக்கும் என்பதை, வடிகட்டியமுட்டாள்கள் கூட எளிதில் ஊகித்துவிடுவர். .*********************** தமிழ்ப் புத்தாண்டுக்கு கூட, "ஹேப்பி டமில் நியூ இயர்'னு வாழ்த்து சொல்றவங்களுக்கு, தமிழ்ப் புத்தாண்டு என்னிக்கு வந்தா என்ன….***************** கல்விக்கு ஆதாரம் ஆசிரியர்கள். அவர்கள் இல்லாமல், நல்லமாணவர்கள் இல்லை. ஆனால், சமீபகாலமாக, நம் பள்ளி ஆசிரியர்களின் ஒழுக்கம்,மிகப் பெரிய கேள்விக்குறியாகி விட்டது.குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ,மாணவ, மாணவியரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், பிட்' அடிக்கஉதவி செய்து, அவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்யும் ஆசிரியர்கள் குறித்த பலசெய்திகள், தினசரி ஊடகங்களில் வருகின்றன. இவர்களில், பல நல்லாசிரியர்களும்இருக்கின்றனர். சில,ஊழல் பேர் வழிகள் அவர்களையும் நல்ல முறையில் பணிசெய்யவிடாமல், அவமானப் படுத்துகின்றனர். ஆசிரியர் தொழிலில், நேர்மை இருக்கவேண்டும். ஏற்கனவே, நம் நாட்டில் ஊழல் மலிந்துள்ளது. இந்நிலையில், எதிர்காலசிற்பிகளை உருவாக்கும் ஆசிரியர்களே, ஊழலை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பினால், நாடு எப்படி ஊழல் இல்லாத நாடாக மாறும்.........கலைஞர் கருணாநிதி மேல் வன்மம் என்றால் அவர் கடந்த ஆட்சியில் அடித்த தில்லு முல்லுகளை வெளியே எடுத்து வாருங்கள் வழக்குபதியுங்கள்.அதை விட்டுவிட்டு பல பேர் இரவு பகல் பாராமல் அரும்பாடு பட்டு மக்கள் வரிப்பணத்தில்கட்டிய அரசு கட்டடிடங்களை
அதிகாரம் இருப்பதால் ஒரு கையெழுத்தில்மாற்றலாம் என்றுநினைக்கின்றீர்கள்.உங்களஆதரிக்க சில அல்லக்கைகள் இருக்கின்றார்கள். அவர்கள் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு நடுநிலை போர்வையில் புதியதலைமைசெயலக கட்டிடத்தை எண்ணெய் சட்டி கட்டிடம் என்று சொல்லிக்கொண்டுஇருக்கலாம்.எனக்கு தெரிந்து ஒரே ஒரு விஷயத்தில் உங்களுக்கு காலம் எல்லாம்
நன்றிசொல்ல நான் கடமைபட்டு இருக்கின்றேன்.மழை நீர் சேகரிப்பின் மூலம் தண்ணீர்பிரச்சனையில் சென்னை ஒரளவு தன்னிறைய்வு அடையசெய்த உங்களின் அந்த அரசாணை வாழ்நாள் முழுவதும் உங்கள் பேர் சொல்லும்.வீராணம் திட்டம் சாத்தியமேஇல்லை என்று உதடுபிதுக்கினார்கள்.ஆனால் நீங்கள் வசப்படுத்தினீர்கள்.திறமைஇல்லாதவர் அல்ல நீங்கள்.மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிரூபித்துகாட்டுங்கள்.தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள்அமைப்பேன். ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால்விடுங்கள்.உங்கள் திறமை ஈகோவினால் வீணடிக்கபடுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மை...
மனித சமுதாயத்தில்துன்ப, துயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களைமிருகங்கள் என்றார் மாமேதை மார்க்ஸ். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்சொல்லும் பொழுது;;தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடுசம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொருகடுகுபோல் உள்ளங் கொண்டோன்,தெருவார்க்கும் பயனற்றசிறிய வீணன்!கன்னலடா என்சிற்றூர் என்போனுள்ளம்கடுகுக்கு நேர்மூத்த துவரையுள்ளம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக