வியாழன், 24 மார்ச், 2011

திமுக தேர்தல் அறிக்கை...19/32011


கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
தாய்மார்கள் தங்கள் விருப்பம் போல் கிரைண்டரையோ அல்லது மிக்ஸியையோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமைதி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
* மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.
* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.
* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.
* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.
* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.
இலவச டயாலிசிஸ்...
சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்க வசதிகளைச் செய்வோம். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சையை அளிக்க வசதிகளைச் செய்வோம்.
ஈழத் தமிழர்களுக்கு சமமான உரிமையும், ஆட்சியில் சம பங்கினையும் அளித்து அரசியல் தீர்வை எட்டுவதற்கு இலங்கையை அரசுடன் பேசி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்.

ஈழத்தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கு உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும் வகையில், இந்திய அரசு தீவிரமான முயற்சிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம்.

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.
* விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை.

* இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் மற்றும் தோட்டப்பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம். 

* நெல், கரும்பு முதலியவற்றுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை.

* வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.
* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.
* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.
இலவச லேப்டாப்...
* அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.

* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.
* விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.
* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.
* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.
* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* மதுரையில் காசநோய் மருத்துவமனை.
* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.
* அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களிலிருந்து 4 மாதமாக உயர்த்தப்படும்.
* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.
* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.
* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீருடை.
* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.
* திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
* கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ. 10 ஆயிரம் ஆக உயர்வு
* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.
* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்.
இலவச பஸ் பாஸ்...
* மூத்த குடிமக்களுக்கு இலவச உள்ளூர் பேருந்து பயணம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம். அதாவது இலவச பஸ் பாஸ்.
* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
* தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.
* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.
* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.
இலவச அரிசி...
* பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.
* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.
* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.
* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.
* ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இலவசம் தொடரும் ...
* விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.
* ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம்.
இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி...
தாய்மார்களின் சிரமங்களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக