புதன், 30 மார்ச், 2011

ஒரு ஊழல் காரணமாக 66 அப்பாவி ஏழை கிராம மக்கள் பார்வை இழந்தார்கள்...


மத்திய அரசு தாக்கல் செய்த அத்தனை ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், தங்கள்  தீர்ப்பில்,
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜோசப் மருத்துவமனைக்கு ஒரு கோடியே, பதினைந்து லட்சத்து இருபத்தைந்தாயிரத்து இருநூற்று எண்பது ரூபாய் 2008-2009ம் ஆண்டுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளது. “பூர்வாங்கமாக பார்க்கும் போது, இலவச கண் மருத்துவ முகாம் என்ற பெயரில், அறுவை சிகிக்கை என்று கோரி, பல கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.   மத்திய அரசு மாநில அரசுக்காக ஒதுக்கிய மொத்த நிதியில் பாதிக்கும் மேல் ஜோசப் மருத்துவமனைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பது எப்படி கண்காணிக்கப் படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை
நிபுணர்கள் குழு, தங்களது அறிக்கையில் ஜோசப் மருத்துவமனைக்கு கண் புரை நீக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று தெரிவித்த பிறகும், எந்த அடிப்படையில் பார்வைக் குறைவு கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஜோசப் மருத்துவமனை கண் சிகிச்சை முகாம் நடத்த எப்படி அனுமதி அளித்தார் என்பது எந்தச் சூழலில் என்பது எங்களுக்கு புரியவில்லை.”

என்று பதிவு செய்த நீதிபதிகள், உடனடியாக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். சிபிஐ தனது விசாரணையில், இந்த 66 கிராமத்தினர் கண் பார்வை இழந்த இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பொறுப்பு என்ன, மற்றவர்களின் பொறுப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு வழங்கிய மொத்த நிதியில் பெரும் பகுதி, ஜோசப் மருத்துவமனைக்கு எப்படி ஒதுக்கப் பட்டது என்றும், அந்த நிதி எப்படி செலவிடப் பட்டது என்றும் ஆறு வார காலங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
.
கண்பார்வை இழந்த கிராமவாசிகளுக்கு, ஒரு லட்ச ரூபாயை பிச்சையாக வீசி விட்டு, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கருணாநிதி, தனது மகளுக்கோ, மனைவிக்கோ, ஒரு சிறிய நகரம் அளவுக்கு இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கோ, இப்படி கண்பார்வை போனால், ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, அமைதியாக இருப்பாரா ?

சம்பவம் நடந்த பொழுது பெரம்பலூர் கலெக்டராக இருந்தவர் அனில் மேஷராம்.   இவர் ஆண்டிமுத்து ராசாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும், பெரம்பலூர் விவசாயிகளின் நிலங்களை சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமொட்டர்ஸூக்காக, பறித்து எம்ஆர்எஃப் ஆலைக்கு வழங்கியவர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
உடனடியாக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். சிபிஐ தனது விசாரணையில், இந்த 66 கிராமத்தினர் கண் பார்வை இழந்த இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பொறுப்பு என்ன, மற்றவர்களின் பொறுப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு வழங்கிய மொத்த நிதியில் பெரும் பகுதி, ஜோசப் மருத்துவமனைக்கு எப்படி ஒதுக்கப் பட்டது என்றும், அந்த நிதி எப்படி செலவிடப் பட்டது என்றும் ஆறு வார காலங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.நீதிமன்றம் இந்த நேர்வில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் என்ன நடந்திருக்கும்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக